Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலக சுற்றுசூழல் தினத்தினையொட்டி விழிப்புணர்வு நிகழ்வு

மே 21, 2023 10:17

திருநெல்வேலி:உலக சுற்றுசூழல் தினத்தினையொட்டி திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் Dr .முருகன் IFS அவர்கள் உத்தரவின்படி "MISSION LIFE" எனும் விழிப்புணர்வு நிகழ்வு, திரவிய நகர் வனக்குழு மற்றும் திப்பணம்பட்டி பொதிகை பெடலிஸ்ட் மிதிவண்டி குழுவினர் இணைந்து பழைய குற்றாலம் அருவி பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் முகாம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சைக்கிள் பேரணி நடைபெற்றது.இந்த முகாமினை குற்றாலம் வனச்சரக அலுவலர் திரு k.பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் குற்றாலம் பிரிவினவர் திரு மு.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், ஆசிரியர்கள் ராகவன், தங்கராஜ், சமூக ஆர்வலர்கள் ராஜசேகர பாண்டியன், வெற்றிவேல் முருகன், காவல்துறை குருநாதகுரு, தொழில் அதிபர்கள் பாலசுப்பிரமணியன், தங்கராஜ், ஆர்க்கிடெக் பொறியாளர் நிஷாந்த் பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்